Sunday 25 April 2010

மெரீனாவை குலுக்கிய ஐமுக மாணவரணி சந்திப்பு!

 

25.04.2010 நேற்று மாலை சென்னை கடற்கரை அரங்கத்தில் நடந்த மாணவரணி சந்திப்பின் போது அங்கே சுமார் 1 லட்சம் பேர் திரண்டிருந்தனர், இன்னும் நமது கழகத்தில் அடிப்படை உறுப்பினர் அட்டை வாங்காத பல்லாயிரம் மாணவர்கள் அங்கே நமது ஐடியா கழகத்தால் ஏற்பாடு செய்யப்படாத மிட்டாய்க்கடை, ஐஸ்கிரீம் கடை, துப்பாக்கி சுடும் கடை, பஜ்ஜி போண்டா கடை மற்றும் கடலலையில் கால் நனைத்த வண்ணம் சந்திப்பில் கலந்து கொண்டனர். அவர்கள் போண்டா, பேல்பூரி, பஞ்சுமுட்டாய்  தின்கிறார்களா, அல்லது கூட்டத்துக்கு வந்தார்களா என்பதை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் டென்சனாகிக்கொண்டேயிருதார்கள்!

கூட்டத்தில் முதலாவதாக வந்த மாணவரணியின் துணைத்தலைவர் ஷாகித் கர்ணா பானிபூரி கேட்டபோது மெரினாவே திரண்டெழுந்து வந்து ஒரு பிளேட் 10ரூவாய்க்கு கொடுத்தனர். நமது கழகத்தின் வளர்ச்சியை கண்டு நாம் மெய் சிலிர்த்துப்போனோம். அதை தொடர்ந்து பல மாணவரணி செயல்வீரர்கள் பட்டம் விட்ட பேரணியில் நமது நீலகிரி பகுதி மாணவரணி செvarsha 005யலாளராக அந்த மாபெரும் பேரணியை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரோகித் ஆதித்யா தலைமையேற்றார். தூர்தர்ஷன் தொடங்கி, சன் டிவி, ராஜ் டிவி, ஸ்டார், பிபிசி என யாருமே  கவர் செய்யவில்லை என்பது ஆளும் திமுக  அரசு நம் ஐமுகவின் வளர்ச்சியை தடுக்க முயற்சிக்கிறது என அப்போது அங்கே தோன்றிய மாணவரணித் தலைவி பப்பு தெரிவித்தார்.

பிறகு நடந்த பலூனை துப்பாக்கியால் சுடும் போட்டியில் நீலகிரிப்புலி ரோகித் ஆதித்யா எட்டுக்கு ஏழு பலூன் சுட்டார். குறிப்பாக அவர் துப்பாக்கியை கையில் சும்மா வைத்திருந்த போதே அவரின் வீரதீரத்தை தாங்காது (வெயில் சூட்டுக்கு) பலூன்கள் வெடித்தது ஒரு அருபெரும் புதிய உலக சாதனை என்று உள்ளூர் கின்னஸ் ஆபிஸ் தெரிவிக்கிறது.

உலகத்தில் முதன்முதலாக அந்த டப்பாதுப்பாக்கியில் குறிபார்ப்பது ஒருவர், லிவரை இழுத்து சுடுவது ஒருவர் என்கிற புதிய முறையை ஷாகித் உருவாக்கினார் என்பது நம்மை பெருமைப்படும் விஷயமாகும், அதுலயும் 8க்கு 4பலூன் வெடிச்சதால், ஷாகித்தை நமது இந்திய ராணுவத்துக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கவேண்டும் என்று ஷாகித் கடற்கரையில் வாங்கிய 30ரூவாய் பிளாஸ்டிக் மொபைலில் விளித்த நம் பாரத பிரதமர் மன்றாடி கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே அடுத்து வரும் தேர்தல் கூட்டணி பற்றி கலந்துரையாடசெல்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்ற நமது பெங்களூரு அமைப்பாளர் முரளிதரன் ஏன் கோபாலபுரமோ போயஸ்கார்டனோ செல்லாமல் சேப்பாக்கம் சென்றார் என்பதன் பின்னணி அறியாத உளவுத்துறை போலிசார் குளம்பினர், இரவில் டுயூடி ரிப்போர்டிங்கின் போது அவர்களுக்கு ஆளுக்கொரு கொட்டுக்காய் கிடைத்தது என்று ஏஜன்சி செய்தீகள் தெரிவிக்கின்றன!. முரளிதரனின் இந்த சாமர்த்திய செயலை பாராட்டிய நமது தலைமை விரைவில் அவரை நமது தலைமைக்கழகத்தில் ஒரு சிறப்புப் பணியில் அமர்த்தும் என்று ஆஸ்திரேலிய பத்திரிக்கை ஏபிசிடிஇஎப்ஜிஹெச் தெஇரிவிக்கிறது.

பிறகு கடற்கரை அலையில் நடந்த தீவிர கலந்துரையாடலில் மாணவரணி அமைப்பாளர் வர்ஷா நமது ஆபிஸ்பாய் தங்கமணிபிரபுவை பார்த்து “இந்த கடலை தாண்டி நீங்க போயிருக்கீங்களா?” என்று கேட்ட கேள்விக்கு நம்மவர் முழித்த முழி இந்த சந்திப்பின் ஹைலைட் என்பது முக்கியமானது. அப்போது அங்கே கூடியிருந்த கழக மாணவரணியினரின் ஆர்ப்பரிப்பு கடலலையின் சப்த்த்தை விஞ்சியது.

எப்படி தன் மேல் விழுந்த ஆப்பிளால் நியுட்டன் புவியீர்ப்பு விசை பற்றி கண்டுபிடித்தாரோ அதே போல் ஒரு வரலாற்று புகழ் பெற்ற நிகழ்ச்சியால் நமது ஐமுகவின் புகழ் இந்த தரணியெங்கும் பொங்கிப்பெருகியது என்றால் அது மிகையாகாது. அதாவது  கடல் அலையில் குட்லிக்கரணம் அடித்து புரண்டெழுந்த நமது மாணவரணி துணைத்தலைவர் ஷாகித் “கிய்ய்ய்ய்ய்ய்…. கடல் தண்ணி ஃபுல்லா உப்பு!” என்று சொன்னதை உளவு சேட்டிலைட் மூலம் அறிந்த அமெரிக்க வின்வெளி நிறுவணமான நாசாவை சேர்ந்த அதிகாரிகள் பர்மிஷன் போட்டுவிட்டு அடுத்த பஸ்ஸில் கிளம்பி மெரினா நோக்கி புறப்பட்டனர். இந்த கண்டுபிடிப்பால் நமது கழகககண்மணி ஷாகித்துக்கு வரும் வருடத்தில் அறிவியலுக்கான நோபல் பரிசு கொடுக்கப்படவேண்டும் என லண்டன் டிரிபுயுனல் பத்திரிக்கை அடித்து சொல்கிறது. இதை கேள்விப்பட்ட ஒபாமா, பில்கேட்ஸ் போன்றோர் அவரவர் ஊர் கடலில் ரெண்டு சொம்பு கடல்தணி குடித்து மகிழ்ந்தனர் என்று நியுயார்க் டைம்ஸ் தெரிவிக்கிறது!

அலையில் புரண்ட மாணவரணிக் கண்மணிகளை மேலே இழுத்து வருவதற்குள் தாவு தீர்ந்துவிட்டபடியால் கலந்துரையாடலை முடித்துக்கொண்டு நாம் உணவுப்பகுதிக்கு சென்றோம்.

கடைசியாக நடந்த விருந்தில் நமது மகளிரணி தலைவி வாங்கிக் கொடுத்த சுட்ட மக்காசோளத்தை பப்பு நிராகரித்தார். ஷாகித் & ரோகித் கணக்கில் ஒரு கசட்டா ஐஸ்கிரிம் மற்றும் ஒரு பணி பூரி, பப்பு வகையில் கிடைத்த பானிபூரி என எதற்காவது யாராவது கணக்கு கேட்டால் கழகத்தின் கொள்கைக்காக உயிரைவிடவும் தயார் என ஆபிஸ்பாய் தங்கமணி பிரபு தெரிவித்துள்ளார்.

நமது ஐடியா கழக கண்மணிகள் தானுவும் மதிவதனியும் ஐபிஎல் லலித் மோடி மெய்யாலுமே மருத்துவமணையில் அணுமதிக்கப்பட்டுள்ளாரா அல்லது ”ஐயாம் சஃபரிங் ப்ரம் பீவர், ப்ளீஸ் கிராண்ட் மீ டூ டேய்ஸ் லீவு” என டூமாக்கோழி வேலை செய்கிறாரா என்பதை தெரிந்து கொள்ள டெல்லி சென்றூவிட்டபடியால் அவர்களால் இந்த சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை.

ஐடியா கழக மாணவரணி சந்திப்பில் கொண்டுவரப்பட்ட தீர்மாணங்கள்

  • ஐமுக மாணவரணிக்கு தனி வலைப்பூ வேண்டும். மாணவரணி வீரதீர பராக்கிரமங்களை விளக்கும் வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் கட்டுரைகள் அதில் நிரப்பப்படவேண்டும்.
  • வாரத்தில் ஒரு நாள் மெரினாவில் மொத்த பெரிசுகளையும் காந்தி சிலையோடு நிறுத்திவிட்டு கடற்கரை மணலில் 3லிருந்து 15 வயதுக்குள் இருக்கும் மாணவர்களை மட்டும் அனுமதிக்கவேண்டும்
  • சத்துனவு, முட்டை மாதிரி வகுப்பரையில் கார்டூன் டிவிகள் அனுமதிக்கப்படவேண்டும்
  • மாணவர்கள் பார்க்க விரும்பும் திரைப்படங்களுக்கு அவர்களை தனியாக வீடு முதல் தியேட்ட்ர் பிறகு தியேட்டர் முதல் வீடு என காவல்துறை பந்தோபஸ்தோடு அழைத்து சென்று வரவேண்டும்
  • 15வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தியேட்டரில் டிக்கட் ரத்து செய்யப்படவேண்டும்
  • ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் எழுதும் பர்ட்சையை அவர்களுடைய டீச்சர்களும் எழுதவேண்டும்.
  •  
  • டீச்சர்களின் பரிட்சைத்தாள்களை மாணவர்கள் திருத்தி போடும் மார்க்குகளை வைத்து சம்பந்தப்பட்ட டீச்சரின் வேலை நிரந்தரத்தை முடிவு செய்யவேண்டும்

மேலும் விபரங்களுக்கு நமது ஐடியா டிவியைப்பாருங்கள்!

(குறீப்பு: நமது ஐமுக அறிவியல் பிரிவு  தமிழில் முதல் முறையாக நியுமராலஜியை கொண்டுவரும் தீவிர ஆராய்ச்சியில் இருப்பதால், நமது ப்ளாக்கில் படிக்குபோது தங்களுடையா சராசரி தமிழறிவை வைத்து வல்லினம், மெல்லினம் என்கிற பழைய முறைகளை தவிர்த்துவிட்டு ”வாழ்கையில் வசந்தத்தை ஏற்படுத்தும் ஐடியா தமிழ்” என்பதை புரிந்து படிக்கவும். இதே முறையை  எழுத்துகளில் பின்பற்றி 3 மாதததில் கோடீஸ்வரர்கள் ஆன நமது ஐடியா கழக உறுப்பினர்களை விரைவில் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். நமது இதழில் எழுத்துப்பிழை என்கிறவர்கள் தெய்வ குத்தத்துக்கு ஆளாகிறார்கள். பிறகு அதை நிவர்த்தி செய்ய அலகு குத்தி சென்னை வரை பாத யாத்திரை வரவேண்டியிருக்கும். அலகை எங்கே குத்துவது என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும்)

(கூடுதல் குறிப்பு: நாலு பக்கமும் சுவரைக்கட்டிவிட்டு கூரைவழியாக வீட்டுக்குள் செல்லும் ஐஸ்வர்யம் அள்ளித்தரும் ஆகாயம் பார்த்த வீடுகள் எனும் ஐடியா வாஸ்து நமது நிபுணார்களின் ஆராய்ச்சியில் உள்ளது. வரும் 2012 உலக மக்கள் அணைவரும் அவனவன் வீட்டு ஓட்டைப்பிரித்து கூரை வழியாக உள்ளே செல்லும் அற்புத வாஸ்து புழக்கத்தில் வரப்போகிறது என்பது ஐடியா கழகத்தின் தனிப்பெருமை!)

Monday 19 April 2010

எப்புடி கடிக்கிறது? திட்டறது? கழகக்கண்மணிகளுக்குப் பயிற்சி…..

கழக வரலாற்றில் முதல்முறையாக தங்களை இணைத்துக்கொண்டுள்ள கழகக்கண்மணிகளுக்கு பின்னூட்டம் இடுவது எப்படி என்கிற ஒரு பயிற்சி வகுப்பு எடுக்க கணினிக்குழு கூடி ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

ஏறகனவே உறுப்பினராக இருந்து கொண்டு பின்னூட்டமிடாமல் டிமிக்கி கொடுக்கும் அனைவருக்கும் சேத்துத்தான்ன்ன்ன்ன்ன்ன்ன்…

அதன் சோதனையோட்டமே இது. இந்தசோதனையோட்டத்தை அனைவரும் படித்து, இரசித்து, உபயோகப்படுத்திக்கொள்ளுமாறு கணினிக்குழு சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தேவையான உபகரணங்கள், சாதனங்கள், இன்னும் மற்ற பிற:

ஒரு கணினி (எலியும்(Mouse), சாவிப்பலகை(Keyboard) யுடன்) முக்கியமா மின்சார இணைப்பு (வீராசாமி ஒத்துழைக்கலைன்னா செயற்கை மின்சாரம் – UPS/Battery)

இணைய இணைப்பு. (வீட்டிலிருந்தும், அலுவலகத்திலிருந்தும், இணையகுழம்பியகத்திலிருந்தும்(Internet Cafe), எங்கிருந்துவேண்டுமானாலும்…இணைப்பு தான் முக்கியம்)

ஆங்கில எழுத்துக்கள், தமிழ் எழுத்துக்கள் தெரிந்திருக்கவேண்டும். (சில பேருக்கு கண்ணாடி அணியவேண்டியிருக்கலாம்)

குறைந்தபட்சம் ஒரு விரலிலாவது தட்டச்சு செய்யவேண்டிவரும்

இப்போது படத்துடன் விளக்கம்.

  • முதலில் நமது த.நா.ஐ.மு.க வலைப்பூ முகவரியை உலாவியில் தட்டச்சவேண்டும்.

ottu1

  • உடனே நமது கழக்த்தின் வலைப்பூ வந்து உங்கள் மனதிலெல்லாம் ஒரு புன்னகைப்பூவைச்சொரியும் (இதெல்லம் ஒரு ப்ளாக், அற்புதமான் ப்ளாக், அட்ரா சக்கை அட்ரா சக்கை அப்படின்னு ஏதாவது ஒண்ணு..)

ottu1

  • உங்கள் திரையில் சமீபத்தில் ரிலீசான பதிவின் எழுத்தும் படமும் இருக்கும். அதை நன்றாகப் படிக்கவும்.

ottu1

  • இப்பொத்தான் ரொம்ப முக்கியமான செயல் ஒரு வீரமுள்ள, கழகத்தின் மேல் பற்றுள்ள ஒரு தொண்டன் செய்யவேண்டிய கடமையை எப்படி ஆற்றவேண்டும் என்கிற படம் வரைந்து பாகங்களை குறித்துள்ளது நமது கணினிக்குழு

ottu1

- மேலே குறிப்பிட்டுள்ள கமென்ட்ஸ் (comments) என்று எழுதியிருக்கும் இடத்தைக்கிள்ளவும்.

  • உடனே ஒரு சாளரம் நமது கழகவிடிவெள்ளி உதித்ததுபோல் உடனடியாக தோன்றும். அது தனியான சாளரமாகவும் இருக்கும். இல்லையென்றால் உள்பொதிந்த சாளரமாகவும் இருக்கும் எப்படி இப்படித்தான்

 

ottu2

  • அந்தச்சாளரத்தில் உங்களுக்குப்பிடிச்ச, பிடிக்காத, உங்களுக்குத்தெரிஞ்ச, தெரியாத, உங்களுக்குப்புரிஞ்ச, புரியாத எதைப்பத்தியும், ஏதாவதைப்பத்தியும் எழுதோணும். எப்படி இப்படித்தான். இன்னும் விளக்கம் வேணும்னா கீழே சாளரத்துக்கு மேலெ எழுதியிருக்கறதைப்படிக்கிறது….

ottu3

- அப்புறம் யார் எழுதுனது? அப்படின்னு தெரிஞ்சுக்க உங்களுடைய மின்னஞ்சல் முகவரி மூலமா இந்தக்கருத்தைப்பதிக்கணும். அதுக்கு போஸ்ட் கமென்ட் பொத்தானை பிக்கணும் (அழுத்தணும்)

  • அதுக்கும் ஒரு சாளரம் உதயமாகும். அதுலே உங்க மின்னஞ்சல் முகவரியையும்(email id) கடவுச்சொல்லையும் (password) தட்டச்சவும்.

image

  • முக்கியமா மறக்காம இந்த சைன் இன் (sign in) பொத்தானை அமுக்கவும். அப்புறமா இது நீங்க கருத்தைப்பதிசெஞ்ச வலைப்பூவில போய் நிக்கும். அதுலே நீங்க எழுதியிருக்கறதை இனியொரு த்டவை திரும்பப்படிக்கும் வாய்ப்பைக்கொடுக்கும். ஏன்னா இனியும் கொஞ்சம் கடிக்கறதுன்னா அதுக்கும் ஒரு வாய்ப்பு.

Ottu6

இப்படித்தான் பின்னூட்டம் போடணும். இதுக்கப்புறம் நிறைய பேர் வந்து எழுதுவாங்க. நம்ம எழுதுனதுக்கு மறுப்பு சொல்வாங்க. எதுக்கும் சலனப்படாம, சஞ்சலப்படாம, கோவப்படாம, வெக்கப்படாம நம்மளும் எத்தனை எழுத்துப்பிழையிருந்தாலும் கண்டுக்காம நம்ம பணியை ஆத்தவேணும்னு கழக கணினிக்குழு கேட்டுக்கொல்கிறது (வேணும்னு தான். இதுல எந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக்கும் இல்ல)

முக்கிய குறிப்பு:

இதில் ஏதாவது சிரமம், ஐயம் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டியவர்கள்:

இந்தியா: ஐடியாகிளி தலைமை ஆசிரியை – மயில் (அவர்வலைப்பூவையும், அவர் கழகத்திற்கு ஆற்றும் தொண்டையும்பற்றித்தெரிய தலைமையாசிரியரின் தலைமை ஆபிஸ் பாய் என்ற தலைப்பின் கீழ் இருக்கும் “மயில்” – ஐக்கிள்ளவும்

ஆப்பிரிக்க, மத்தியகிழக்காசிய நாடுகள்: நைஜீரியப்போர்வாள், கழகத்தின் உலகப்போர்முரசு, நைஜீரியா இராகவன்

மற்ற நாடுகள் மற்றும் உலகமெங்கும் இருக்கும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு: நாந்தேன். என்ன செய்யறது. யாராவது பின்னூட்டம் போட்டாத்தானெயாகும்

எச்சரிக்கை:

அடுத்ததாக எப்படி ஓட்டுப்போடுவது என்கிற பயிற்சி வகுப்பு நடத்தப்படும். இப்போதே அனைவரும் அப்திவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பின்னூட்டப்பதிவு இலவசம். ஓட்டுப்பயிற்சி கட்டணம் கணினிக்குழு பொதுக்குழுவுடன் கலந்தாலோசித்து கழக அறிவிப்பாக வெளியிடும்.

சொல்வதும் ஐடியா! செய்வதும் ஐடியா!!

வாழ்க ஐடியா! வளர்க ஐடியா!!

Saturday 17 April 2010

காணாமல் போனோர்… ஓர் அறிவிப்பு…….வதந்திகளை நம்பாதீர்….

அன்புடையீர்,

நிகழும் விரோதி ஆண்டு, சித்திரைத்திங்கள், 4-ஆம் தேதி…த.நா.ஐ.மு. கழக அதிகாரபூர்வ அறிவிப்பின் படி கீழ்கண்டோர் காணாமல் போயுள்ளனர்.

கழகத்தை ஐடியா சுரங்கத்திலிருந்து வெட்டியெடுத்த சொக்கத்தங்கமாம்….. திருவாளர். தங்கமணிபிரபு (சுரங்கத்தில் மதிக்கமுடியா வைரம் இருந்ததால் தலைமறைவானாரா?)

கோவை கொள்கைச்சிங்கம், கொங்குநாட்டு கிளி, ஐடியாகிளி – கழகக்கொள்கைப் பத்திரிக்கையின் நிறுவனர்….திருமதி. மயில் (பத்திரிக்கை அச்சடிக்கப்போவதாக சொன்னவர் திரும்பவில்லையா?)

நைஜீரியப்போர்வாள், போர்முரசு – திரு நைஜீரியா இராகவன்  (ஒபாமாவையும், ஒசாமாவையும் சேர்த்துவைக்கப்போய்விட்டு வரவில்லையா?)

கூட்டணிபற்றி முடிவெடுக்கும் அதிகாரமுள்ள, இளைஞரணி தேர்தலை மேற்பார்வையிடும் சஞ்ஜய் காந்தி (ராகுலுடன் இணைந்து “மால்டா’ வில் நடக்கும் இளைஞரணி தேர்தலை மேற்பார்வையிட சென்றபோது ஏற்பட்ட வேட்டி கிழிசலில்…..)

பாலாசி (அவர் எழுதிய எண்ணங்களை பிரதியெடுத்துக்கொண்டு நமது இலக்கிய அணியுடன் இணைந்து “பப்புவா-நியு-கினியா” சென்று நிகழ்ச்சி நடத்தும்போது ஏற்பட்ட கொள்கை மோதலில்….)

மேலும், எல்கே, சந்தனமுல்லை, பழனி சுரேஷ் போன்ற கழக முன்னோடிகள் காணாமல் போயுள்ளனர் என்பதை ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்படி நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும், வார இதழ்களிலும், வானொலியிலும், வாய்வழியாகவும், காற்றுவழியாகவும் வரும் செய்திகளை நம்பவேண்டாம் என்று பெங்களூரிலிருந்து கேட்டுக்கொள்கிறோம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும், நமது கழகத்தொலைக்காட்சியில் இன்று இரவு சரியாக நள்ளிரவு 12:00 மணியளவில் இணைந்து தோன்றி வந்த செய்திகள் வதந்தி என்பதை உறுதிப்படுத்துவார்கள். இது விடியோ கான்பெரன்ஸ் நிகழ்ச்சி. மேலும் இது உலக நாடுகள் எஙும் நேரடி ஒலி,ஒளிபரப்பப்படுகிறது. கழகக்கண்மணிகள் கேள்வி கேட்கலாம்.

முக்கிய செய்தி: நிகழ்ச்சிக்கு முன்னும், பின்னும் அழகான நாட்டியம்: நமது கனவுக்கன்னி – சி.ஐ.டி – சகுந்தலா. கனவுக்கண்ணன் – சுகுமார். காணத்தவறாதீர்.

வதந்திகளை நம்பாதீர். (பின்னூட்டத்துக்கு விடையளிக்கவில்லை, ஓட்டுப்போடவில்லையென்றால் காணாமல் போய்விட்டதாக அர்த்தமாகாது. இந்தப்பதிவுக்குப்பார் தமிழினமே….எத்தனை ஓட்டுக்கள்… எத்த்னை பின்னூட்டங்கள்)

தமிழினமே…..எதிரிகளின் வாய் மூட, ஊடகங்களின் மமதையைக்கொளுத்த வீறு கொண்டு போடு உன் ஓட்டை தமிழிஷ்-லும், தமிழ்மனத்திலும்.

ஐடியா கழகக்கண்மணிகளே…..நம் ஆட்சிவந்துவிடும் என்ற பயத்தில் எதிர்கட்சிகள் செய்யும் இந்தக்கோமாளித்தனத்தைத் தோல் உரிக்க வரிசையாய் இடு உன் பின்னூட்டங்களை..

 

வாழ்க ஐடியா!  வளர்க ஐடியா!!

Saturday 10 April 2010

சுள்ளி பொறுக்கியின் சுயரூபம்

கழக கண்மணிகளுக்கு சில மேட்டர்களை விளக்க வேண்டிய அவசியத்தை கழக தலைமை ஏற்படுத்தி விட்டது. தினம் கழக அறிவிப்புகளில் தியாக சொருபம் மகளிர் அணிதலைவியை பற்றி வரும் உண்மைக்கு புறம்பான செய்திகளை மறுக்கவே, தலைவி காலையில் மிக சரியாக 8 .45 க்கு எழுந்து இந்தபணியை முடித்து மீண்டும் ஆனந்த சயனம் மேற்கொள்ள போய்விட்டார்.

வேற ஒன்னும் இல்ல, இந்த கழகத்துக்கு ஒரு பத்திரிகை வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த ஐடியா கிளி பத்திரிகை. அதன் பொறுப்பாசிரியர் , வேற யாரு மகளிர் அணி தலைவிதான். வேற எந்த கண்மணிகலாவது எழுத ஆசைப்பட்டால், தெரிவிக்கவும்.

இந்த இதழில் கொசு வார் தரும் தகவல்கள் :

கழகத்தில் பதவிக்கு அடிதடி நடப்பதால், நம்ம பதிவுலகில் இருந்து யாரையாவது ப்ரோமோசன் குடுக்கலாம்னு பார்த்தல் ஏற்கனவே சுள்ளி பொறுக்கிக்கு கடும் எதிர்ப்பு நிலவுதாம். சின்ன புள்ளைங்க கதைஇல ஒரு நரி வரும் அது என்ன பண்ணும் ஏமாந்த மாட்டு, மனுஷன், கொக்கு, குயிலு, கொரங்குன்னு நல்லா படியா பேசி அதுமடவீட்டுக்கு கூட்டிட்டு போய் கழுத்தருதுரும், மனுச பயக கூட பழகினா புத்தி நல்ல படியா இருக்கும், காட்டுவாசிக்கு எங்கிருந்து ?? அட மகளிர் அணியில் செமத்தியா பேரு வச்சு கெளப்பராங்க, பவுடர் டப்பா, ந.ந.க., காஞ்ச மீனு இதெல்லாம் பேராம். நல்லாத்தான் இருக்கு. பேர சொன்னாலே அதிரதால அது நினைச்சுக்குது பெருமையா, இங்க ஒரு ஜீவன் விடாம பொகையாராங்க, மவனே பார்த்து இரு எவனாவது மூக்கில மொக்கிரப்போறான். ஏறகனவெ மல்டிபிள் பர்சனாலிட்டி நாலு இல்ல் நாப்பது பேர மாதிரி பேசறது பெருமை இல்லன்னு யாரும் சொல்லலையாம். யாராவது ரெண்டு அப்பு அப்பனா கூட பெருமையா போட்டா புடிச்சு போட்டுக்குமாம். எதுனா எக்ஸ்ட்ரா இருந்தா வாங்குங்க கழக கட்டிடத்துக்கு ஒரு கோமாளி பொம்மை வேணும். கேடியில ஒருத்தனா ஆக எல்லா முயற்சியும் நடக்குதா. நான் அதில இல்ல இதில இல்ல ஆனாலும் நான் கேடின்னு ஜீப்பில ஏற ஓடுது. அட மக்கா, எதிலயும் இல்லாட்டி என்ன அதில இருந்தாலாவது எவனாவது விட்டு போகும் அதான் மெயிலும், போனுமா பண்ணி படிக்க சொல்லி சாவடிக்கரையன்னு கழக கண்மணிகள் கதறல். கண்மனிகளூக்கு ஒரு எச்சரிக்கை, யாருனா மறுபடியும் மாட்டினா கையோட ஒரு கிலோ பஞ்சு கொண்டு போங்க, காதில் வெச்சுக்க இல்லன ரத்தம் வந்திடும். வயசுக்கு ஏத்த புத்தி தர வேண்டும்னு வேணா 108 திருப்பதி போய் வேண்டிக்க சொல்லலாம். இத்தனை பிரச்சனை இருப்பதால் சுள்ளி பொறுக்கியை தள்ளி வைக்க பிராது குடுக்கலாம்னு தலைமை யோசிக்குது.

கழகத்துக்கு ஒரு நாட்டாமை தேவை, பின்னலாடை நகர தலயை நாமினேட் பண்ண முடிவெடுத்திருக்காங்கலாம். ஏன்ன அங்கதான் திருஷ்டி பட்டுடுச்சாமே, செயலு ரெண்டு மாசம் முன்னாடி தலையில் தையலோட வந்தாராம், இப்ப தல கால் சுண்டு விரலில் ஆறு தையலோட வந்தாராம். அதனால் கழக மாநாட்டை பின்னல் நகரத்தில் வைக்க ஆலோசனையாம்.

இன்னைக்கு இம்புட்டு தான் :)

அடுத்த வாரம் இன்னும் அதிக கிசுகிசுவுடன் வரும்... புதிய ஐடியா கிளி :) படிச்சா கிலி :)) (கிழி இல்லை)

Thursday 8 April 2010

நீராவி இட்லி, நிலக்கடலை சட்னி

வா ஐடியா தமிழினமே
வீறுகொண்டு எழுந்து வா!
ஐடியா கழகத்தின்
இளம் ரத்தம்....
சக்கரவியுகம் உடைக்கும்
புதிய அபிமன்யு....!.
புரட்சியில் பகத்சிங்!
வீரத்தில் ஜான்சிரானி!
படிப்பது யுகேஜி @#$
நம் இளைஞரணி தளபதி
பப்பு பாப்பா பரிட்சை எழுதுகிறாள்
பறந்து வா ஐடியா ரத்தமே

வரப்போகிறது இறுதிப்பரிட்சை
நைஜீரியாவிலிருந்து திராட்சைகள் வரட்டும்
சித்தப்பூ கையால் பேரிடசைகள் வரட்டும்
எழுதி வாடிய கரங்களுக்கு தங்க வளை கொண்டுதரட்டும்

இனி பிறக்கிறது தேர்வு விடுமுறை
கும்கி வேலைக்கு லீவு போடட்டும்
குழந்தை கேட்கும் மிட்டய்களை கொண்டு தரட்டும்!
அவள் சிரித்தால்
உங்களுக்கு பொண் கர்ச்சீப்பு ! (அட பொண்ணாடை மாதிரிங்க)
மாறாக அழுதால்
போய்ட்டு வாங்கப்பு!


ஞாயிறுக்கு பின் திங்களும் விடுமுறை
வரும் இரு திங்களும் இதுவே முறை
பட்டர்பிளைக்கு வேறென்ன வேலை
உலகப்படக்கதைகள் சொல்லி
கிள்ளையை உறங்கப்பண்ணட்டும்!
பாப்பு உறங்கினா நீங்க மாப்பு!
மாறாக கடுப்பானால் வரும்டி ஆப்பு!

நீராவி இட்லி, நிலக்கடலை சட்னி
என ஐடியாகக்ளை உலகுக்கு அளித்த
சிங்கத்தமிழினித்தின் தங்கத்த்மிழச்சி
விக்கியே வா! வின்னைத்தாண்டி
பிள்ளைக்கு விளையாட்டு காட்டிடு!
விழுந்து விழுந்து அவள் சிரித்தால்
உமக்கு கிடைக்கும் 2 தேன் முட்டாய்!
கீழே விழுந்தவள் முட்டி சிராய்த்தால்...
விக்கீ.....(சாரி, ரைமிங்கா ஒன்னும் கிடைக்கல)


யாரு செத்தாலும் பொழைச்சாலும்
கார்த்தால் 9 மணிக்குத்தான் கண்விழிக்கும்
தியாக சொரூபம் அக்கா - 
எங்க மக்கா - மயிலக்கா
இரண்டு மாதத்துக்கு - மகளே
பப்புவிடம் பப்பு வேகாது!
அதிகாலை வாக்கிங் போவாய்
எம் பெண்புலியே!
தலைமையே தொலைபேசியில்
ராமை விளித்து
வாங்கித்தரசொல்லும்
உமக்கு பிடித்த
இடியாப்பம் பாயா!
மத்தியானம் உறங்குவாயானால்
உனக்கு கிடைக்காது
ராம் வழக்கமாக போடும் சாயா!!!

தேர்தல்
விண்ணப்பம் விற்ற காசில்
பெங்களுரூவில்
ஆப்பிளும் திராட்சையும்
வகைக்கு 20 கிலோ
வாங்கி வாரும் முரளீதரா
தலைமைக்கழகம் - உமக்கு
வரிவிலக்களிக்கும்!
ஊட்டிக்கு போய்ட்டேன்
ஊருக்கு போய்ட்டேன்னு
காரணம் சொல்லிப்பாருங்க..
மவனே
தலைமை உம்மிடம் 
கணக்கு கேட்கும்!
கணக்கு ஒரு மண்ணும் கூடத்
தெரியாத தலைமையிடம்
மைனஸ் ப்ளஸ் சொல்லியே
தாவு தீர்ந்து போகும்!

சஞ்சய் காந்தி......
வாரமிருமுறை
மைசூர்பாக்கு ஐஸ்கிரீமுடன்
பப்புவுக்கு கொணர்ந்து தரூவீர்
காரா மற்றும் இனிப்பு பூந்தி!
இடையில் அவங்கம்மா
ஆட்டையை போடாமல்
பூந்தியை காத்திடுவீர் 
எமதருமை காந்தி!

சந்தனமுல்லை, பாலாசி
தங்கமணிபிரபு, எல்கே
உண்மைத்தமிழன்
பழனி சுரேஷ் யாவருக்கும்
கண்ணான வேலையுண்டு!
பப்புவுடன் சேர்த்து
விடுமுறை காணும்
ஐடியா கழகத்தின்
அணைத்து  எல்கேஜி யுகேஜி
மாணவரணி மான்களுக்கும்
காவல் காப்புடன்
நொண்டி, பல்லாங்குழி
கில்லி, சிட்லி
கிளியோர்(க்)கிளி (க் - இங்கே சைலண்ட்)
என அவர்கள் சொல்லும் ஆட்டங்களை
ஆடிக்காட்டுவீர்
வன்முறை புரட்சி என த்வறாக புரிந்துகொண்டு
காவல்துறை உம்மை கைதுசெய்யுமாயின்
சிறை நிரப்புவாய் கண்மணி!
உங்களுக்கு சோறு போட்டே
காலியாயிடும் கஜானா!
மரியாதையா ரிலிஸ் பண்ணிடுவாங்க
வந்து மறுபடி விளையாடுங்க!

வா பப்பு தலைமையேற்ற
மாணவரணி சிங்ககுட்டிகளே
ஐடியா கழகம் 2 மாசத்துக்கு
உங்களுக்கு சேவை செய்யும்!
ஏனென்றால்...........
வேற வழி!@#$%

சொன்னதும் ஐடியா! செய்வதும் ஐடியா!!

Wednesday 7 April 2010

ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு…டிக்கெட் விற்கப்படுகிறது….

vote

இதனால் சகலஜனங்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நமது கழகத்தின் சார்பாக போட்டியிட விருப்பமுள்ளவர்கள் டிக்கெட் விண்ணப்பங்களை உடனடியா தலைமைக்கழகத்தின் பெங்களூரு கிளையில் பெற்றுக்கொள்ளவும்.

image

ப்ளீஸ் நோட் திஸ் பாய்ண்ட்:

டிக்கெட் விலை:

ஒண்ணேமுக்கால் பெரிய “சி”. காசோலையோ, காசாணையோ, பணவோலையோ ஏற்றுக்கொள்ளப்படாது. ஒன்லி கேஷ். டாலரும் ஏற்றுக்கொள்ளப்படும்.

 

கல்வி:

செயல்முறைக்கல்வி போதுமானது. கழகத்தொலைக்காட்சியில் வரும் தற்காப்புக்கலை நிகழ்ச்சியில் வரும் அனைத்துக்கலைகளிலும் தேர்ச்சி. குறைந்தபட்சம்: நாட்டுக்காக தற்காப்பு

வயது:

கழகம் என்னதான் போராடினாலும் அரசாங்கம் குறைந்தபட்சமாக 35 வயதைக்குறீப்பிட்டுள்ளது. நாம் ஜெயித்தால் கண்டிப்பாக 3-ஆக மாற்றுவோம்.

உடை:

அஞ்சாறு கலர் கலர் கரை வேட்டி. மேலெ போடரதுக்கு ஒரு கோட். முடிஞ்சா துண்டும் தலைக்கு தொப்பியும். பிஞ்ச செருப்பு மேல் தகுதியாகும். சைக்கிள் செய்ன், சோடாபுட்டி கையாளத்தெரிவது கூடுதல் தகுதி.

வண்டி, வாகனம்:

நாப்பது அம்பது சுமோ - பிரியாணிக்குக் கூட தொட்டுக்க கலர்தண்ணி வாங்கப்பிடிக்கப்போக வர. பூத் புடிக்க. உருள்கட்டை, சோடாபாட்டில் போட்டுவைக்க.

பத்துப்பதினஞ்சு லாரி, பஸ்ஸு – கூட்டத்திற்கு தொண்டர்களை வாங்கிட்டுவர (கூட்டிட்டு வர?). ஓட்டுப்போட வாக்காளர்களை கூட்டிவர. (நம்ம கோஷ்டி ஆளுகளை டூர் கூட்டிப்போக – நம்பிக்கை வாக்கெடுப்பு வரை)

பேச்சு:

speak

கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்கவேண்டும். போட்டியாளருக்கு மட்டும். வீட்டில் மற்ற அனைவரும் “சைனீஸ்” படித்தாலும் சரியே. கெட்டவார்த்தை பேச நேர்ந்தால் மைக்கைமூடத்தெரிந்திருக்க வேண்டும்.

எழுத்து:

கடிதம் எழுத, அறிக்கைவிட, கவிதை, கழகக்காளைகளுக்கும், மான்களுக்கும் கொந்தளிக்கும் கட்டுரை எழுத குறஞ்சது ஒரு கோஸ்ட் ரைட்டர் வைத்திருக்கவேண்டும்.

போஸ்டர், பிட் நோட்டீஸ், பேன்னர், கொடி தோரணம்:

கழகம் அனைத்து ஐடியாக்களையும் டிசைனையும் இலவசமாக வழங்கும் (சென்னைத்தலைமைக்கழகம்) என்பதை மகிழ்ச்சியாக அறிவிக்கிறோம். ப்ரிண்ட், க்ட்டுவது, ஒட்டுவது, பிரிப்பது, கொடுப்பது ஆகிய பொறுப்புகளை உங்கள் வசமே ஒப்படைக்கிறது. தொண்டனான உன் மீது வைத்திருக்கும் அதீத நம்பிக்கையே தம்பி காரணம்.

தேர்தல் நாள்:

பிப். 2011

பொறுப்பு:

ஜனாதிபதி

நமது கழகத்தின் சார்பாக போட்டியிட முன்னாள் ஐ.நா. செயலர் கோபி அண்ணன், பழைய பாதுகப்பு ஆலோசகர் நரகாசுரன் (தீவளி வேண்டாம்னுட்டு), இரஷ்யப்போராளி புடின், இராக்கினை இரையாய்க்கொண்ட புஷ் ஆகியோர் 3 பெரிய “ச்” கொடுத்து விண்ணப்பித்துள்ளனர். ச்-ஐ சி-ஆகப்படிக்கவும்.

பின்தங்காதே தமிழினமே. புறப்படு பெட்டியோடு. வந்து சேர் பெங்களூரு. பெற்றுச்செல் விண்ணப்பம். வெற்றி நமக்கே.

முக்கியத்தகவல்:

எக்காரணம் கொண்டும் டிக்கெட் பணம் திரும்பக்கேட்கக்கூடாது. அப்படியே கேட்டாலும் பொதுக்குழுக்கூடி கும்மாங்குத்துத்திருவிழா நடைபெறும்.

இதைப்பற்றிய அரசாணை அனைவரின் பார்வைக்கு:

 

Elections in Uganda

Political System: Restricted Democratic Practice
President: Yoweri Kaguta Museveni (NRM) [since 26 January 1986; seized power in 1986 military rebellion, elected 1996, re-elected 2001 and 2006] The President is elected by direct popular vote for a 5-year term. Electoral System: Two Round (Run-off).
Prime Minister: Apollo Nsimbabi (NRM) [since 05 April 1999] The Prime Minister is appointed by the President.
Parliament [unicameral] (319 Seats) 215 members are elected by direct popular vote in single-member constituencies using the first-past-the-post system, 69 women are directly elected to represent each of the country's districts, 15 members representing special interest groups are indirectly elected (5 youth representatives, 5 representatives of persons with disabilities, and 5 worker's representatives), 10 members represent the Uganda People's Defence Force (army), and another 10 are ex-officio members; members serve 5-year terms.
Political Situation since Independence
1962-1966 Democracy
1966-1969 Restricted Democratic Practice
1969-1971 One Party State (UPC)
1971-1979 Military Regime
1979-1980 Transitional Government
1980         Military Regime
1980-1985 Restricted Democratic Practice
1985-1989 Military Regime
1989-1996 Transitional Period
1996-        Restricted Democratic Practice
2007 Freedom House Rating: Political Rights - 5, Civil Liberties - 4, Status: Partly Free
Next Scheduled Presidential Election: 2011
Next Scheduled National Assembly Election: 2011

* conditions apply

* எந்த வழக்குப்போடுவதாக இருந்தாலும் கொள்கைப்பெண்சிங்கம் மயில் அவர்கள் பெயரிலும், நைஜீரியப்போர்முரசு, ஆப்பிரிக்காக்கண்டத்தின் தேர்தல் அமைப்பாளர் சித்தப்பூ.. (சரிதானே மயிலக்கா) நைஜிரியா ராகவன் பெயரிலும் அனுப்ப, நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

வாழ்க ஐடியா!

வளர்க ஐடியா!

அடுத்த உகாண்டா ஜனாதிபதி த.நா.ஐ.மு.க உறுப்பினரான நீதான் தம்பி / தமக்கை. புறப்படு பெட்டியுடன். பெங்களூரிலிருந்து நான்ஸ்டாப் டு உகாண்டா ஃப்ளைட் கழகம் சீட் போடும்.

வெற்றி ஐடியாவுக்கே……….

Tuesday 6 April 2010

கழகத்தொலைக்காட்சி உதயமானது

SwordSunriseIdentity

நமது கழகத்தின் தொ(ல்)லைக்காட்சி பெங்களூருவிலிருந்து உலகளாவிய கொள்கைபரப்புச்செயலுக்காக கடந்த மார்ச் திங்கள் மதிநிறைந்த நன்னாளில் வணக்கம் உலகம் நிகழ்ச்சியுடன் தமிழ்ஞாயிறு, இந்திய சூரியன், உச்சவின்மீன், உலகசூறாவளி - ஆகியோர் முன்னிலையில் பட்டாசு கொளுத்திப்போட்டு, (கட்டப்பஞ்சயத்து செஞ்சு மிரட்டி கூட்டிட்டுவந்ததா சொன்னதை நம்ப்பாதே தமிழினமே)தங்கு தடையின்றி நேரடி ஒளிபரப்பு சிறப்பே நடைபெற்றது என்பதை என் ரத்தத்தின் ரத்தங்களான, உடன்பிறப்புகளுக்கும், உயிரிலும் மேலான ரசிகர்களுக்கும், தோழர்கள்க்கும், இனமான பார்வையாளர்களுக்கும் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

நமது தொலைக்காட்சியின் நிகழ்ச்சி நிரல்:

04:00 மணி: எழுப்புக்குத்து:

clip_image002

நல்ல கருத்துக(கள்) நிறைந்த கும்மாங்குத்துப்பாடல்கள். பள்ளி செல்லவும், சமையல் செய்யவும், அலுவலகம் செல்லவும் காலை எழும்போதே கிளர்ச்சியூட்டும் மன்னிக்கவும் புத்துணர்ச்சியூட்டும் பாடல்கள்.

05:00 மணி: இன்றைய, நேற்றைய மற்றும் நாளைய பலன்கள்

clip_image004

நேத்து உருப்படாத நாளாயிருந்தது, இன்று உருப்படும்னு தப்புக்கணக்குப்போட்டா நாளைக்குக் கண்டிப்பா உருப்படாது. பரிகாரத்துக்கு தினமும் நாலு தடவை ஆலமரத்துக்குப்பக்கத்துலெ இருக்கற அரசமரத்துக்கு அந்தப்பக்கமா இருக்கற எம்ப்ளாய்மெண்ட் எக்சேன்ஞ் போய் வரிசையிலெ நிக்கணும். (எத்தனை யுகம்னு கேக்கப்படாது!)

06:00 மணி: வணக்கம் உலகம்:

clip_image006

த.நா.ஐ.மு.க-வைப்பற்றி பெருமையாக பேசக்கூடிய, கழகத்திற்காக குரல் கொடுத்த, தமிழ், தமிழ்-னு மாரடிக்கிற கோயம்பத்தூரு கோயிந்து, அவினாசி அய்யனாரு, கலக்கல் கானா கந்தசாமி, டெல்லிமுள் தினேசு, அருவாள் ஆறுமுகம் போன்ற நல்லோர்கள், சான்றோர்களிடம் கலந்துரையாடுபவர் நேத்துப்பொறந்த B.D, C.D, F.D. (இவர்கள் அனைவரும் தொகுப்பாளினிகளின் சங்கத்தலைவர்கள் ஆவார்கள்)

07:00 மணி: சண்டைபோடுவது எப்படி (தற்காப்புக்க்கலைன்னும் சொல்வாங்க)

clip_image008

உலகப்புகழ்பெற்ற பட்டாக்கத்தி பைரவன் கற்பிக்கும் கலைகள். சொல்லித்தரப்படுபவை:.

வீட்டுக்காக:

அட்டைக்கத்திசண்டை, பேனாக்கத்தி ஓபனிங்.தோசைக்கரண்டி தடுத்தல். பூரிக்கட்டை தடுப்பு,

(பெண்கள் ச்பெசல்): குடுமிபிடி, குழாயடி, கிணத்தடி

நாட்டுக்காக:

மைக் பிடுங்குதல், உருட்டுக்கட்டை பிடித்தல், சுமோ ஓட்டுதல், போச்டர் கிழித்தல், சிலை உடைத்தல், மரம் வெட்டுதல், ஹெலிகாப்டர் முன்னால் தரையில் விழுந்து வணங்குதல், காரிலும் ஜீப்பிலும் தொங்குதல்

08:00 மணி: இறைவனின் நேரம்

clip_image009

உலகெங்கும் உள்ள எந்த எந்தக்கோயிலில் எத்தெனெ ரூவாயி வசூலாச்சுங்கற விவரம். அப்பொத்தானே எங்க அதிகமா உழுந்துச்சோ நாமளும் அங்க போயி போடலாம். மனம், மொழி, இனப்பாகுபாடு பார்க்காத நிகழ்ச்சி

09:00 மணியில் இருந்து 21:00 மணி வரையிலான நிகழ்ச்சிகளுக்கு கடும் போட்டி நிலவுவதால் முடிவு எடுப்பதில் சிரம்மாக உள்ளது. தொலைக்காட்சியின் பொதுக்குழுவும், செயல்குழுவும் இப்போது பாண்டிச்சேரியில் ரூம் போட்டு....என்ன்மோ செய்து கொண்டிருக்கிறார்கள்.

21:00 மணி: உணமை! உக்காந்த்து என்ன?

இந்த வாரம்:

மூனு பொண்டாட்டி, மூனு புருசன்..இதன் சூட்சும்ம் என்ன?

பாண்டாகரடி சென்ற மாமா குகை

ஏன் பிடிக்கிறது பேய்..

22:00 மணி: இப்படிக்கு மல்லிப்பூ....

இஞ்ஜி தின்ற குரங்குக்குப்பிடித்த பேய்...இருக்கிறதா? இல்லையா?

23:00 மணி: பொய்யல்ல மெய்...

கல்யாணம் ஆகியும் திட்டாத, அடிக்காத, மொறைக்காத, மனைவி, அதைப்பார்த்து சங்கடப்படும் கணவன்.

24:00 மணி: ஊம்..ஊம்...சொல்லமாட்டோம். நீங்களே பார்த்துக்கோங்கோ???

அனைத்துக்கழக்க்கண்மணிகளும் தங்களுடைய விருப்பத்தைக்கூறினால் தகுந்த மாற்றங்கள் செய்யப்படும்.

முக்கியமான செய்தி:

காணத்தவறாதீர்கள். உலகத்தொலைக்காட்சி வரலாற்றில் 1001-ம் முறையாக சின்னத்திரைக்கு வந்து சில வாரங்களே ஆன...............ரும்..................வும் நடிக்கும்.............காட்சிகள் நிறைந்த..........................................படம் ஒளிபரப்பப்படும்.

மேலும் விவரங்களுக்கு 19:30 செய்தியைக்காண்க.

கழகச்செய்திகள்:

பொதுக்குழு, செயற்குழு கூடி வாரநிகழ்ச்சியையும், மாத நிகழ்ச்சியையும், விடுமுறை தின நிகழ்ச்சிகளையும் முடிவு செய்யும் என்று தெரிகிறது.

”சென்ற ஆண்டு பூமி” நிகழ்ச்சியைத்தொகுக்க, வழங்க: நைஜீரிய போர்முரசு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

”செய்திகளை” நமது மானாட மயிலாட(மன்னிக்கவும் பழக்கதோஷம்) தானைத்தலைவி, கொங்குநாட்டுக் கொள்கைச்சிங்கம்(பெண்சிங்கம்) மயிலு க்ரியேடிவ் ஹெட்-ஆ இருந்து நடாத்த வேண்டும் என்று பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.