Tuesday 30 March 2010

ஐமுக – ஒரு அவசர பிரகடன(ண)ம்!

 

ஐமுக மகளிரணி தலைவி தியாக சொரூபம் மயிலு

ஐ.மு கழகத்தின் நைஜீரியப்போர்வாள் ராகவன்

ஐமுக புதுமாப்பிளைகள் அணி செயலர் சஞ்சய் காந்தி

ஐமுகழகத்தின் கர்நாடக மாநில அமைப்பாளர் முரளிதரன்

ஐமுக உளவுப்படை தளபதி கும்கி

மகளிரணி இனமுரசு சின்ன அம்மணி

கொளகை எதுவும் முடிவு செய்யப்படாத நிலையிலும் நாந்தான் கொ.ப.செ என்று அடம்பிடிக்கும் அன்னை சந்தனமுல்லை

ஐமுக இளைஞர் அணி செயல்வீரர் சாம் தாத்தா

கழகத்தின் செய்திமுரசு “ஐடியாகிளி” இதழின் இணைஆசிரியர் நேசமித்தரன்

கழகத்தின் (ரெம்ப) இளஞ்சிங்கம் பப்பு பாப்பா

என இங்கே கூடியிருக்கும் கூட்டம் ஒரு ஐடியா தேரோட்டம்!

நம் ஐமுக கண்ட சவால்கள், சாதித்த சாதனைகள் ஆகியவற்றுடன் இவ்வுலகில் யாருமே கண்டிடாத மாபெரும் பிரச்சனையான தனியாக டீ ஆத்துவதை பற்றி விரைவில் ஐடியாகிளியில் பர பர பரபரப்புத் தொடர் எழுத உள்ளார் நம் நைஜீரிய சிங்கம் ராகவன்!

வரும் 2011ல் அந்த மகா காவியத்தை புருனே சுல்தான் பிலிம்ஸ் தயாரிப்பில் இதுவரைக்கும் தயாரிப்பாளர் யாருமே கிடைக்காத நம் ஐடியா இயக்குனர் தங்கமணிபிரபு குழப்பத்தில் சாரி…, இயக்கத்தில் “காப்பியில் ஒரு டீ” என்ற பெயரில் ஒரு சரித்திர திரைப்படமாகவும் எடுக்கவுள்ளோம். அதிலும் நம் ஸ்டைல் நாயகர்கள் நைஜீரியா ராகவனும் சஞ்சய்காந்தியுமே நாயகன் & வில்லனாக நடிக்கவுள்ளனர். நாயகியராக தமிழ் திரையுலகில் முதன்முறையாக ஹாலிவுட்  சிலுக்கு - ஏஞ்சிலீனா ஜோலியும் அமெரிக்க ஷகிலா - சாண்ட்ரா புல்லக்கும் நாயகி & வில்லியாக நடிக்கவுள்ளனர்! படத்துவக்க விழாவுக்கு சினிமாவ தவிர  வேறெந்த வேலையுமே இல்லாத தமிழ் தலைவர் ஒருவர் லோட்டவில் டீயை ஆத்தி, கிளாப் அடித்து  படப்பிடிப்பை தொடங்கிவைக்கவுள்ளார்! கட்டவுட் டெண்டருக்காக நாளைக்கு காலைலயே தலைமைகழகத்தில் வந்து யாரும் குவியவேண்டாம். அந்த மாபெரும் சவாலை தலைமை கழகத்திலேயே நாங்களே சமமா பிரிச்சுகிட்டோம்!

ஐமுக ப்ளாக்குக்கு ஆளுக்கோரு ஓட்டு போட சொன்னோம், யாரொ ஒருவர் என்னுடைய ஓட்டையும் சேர்த்துப் போட்டுள்ளார்! அந்த ஐடியாவின் நேர்மையை நான் பாராட்டுகிறேன்! இப்பிடியே ஒரு கும்பலா கிளம்புனம்னா, குவாட்டரும் பிரியாணியும் கொடுக்கமலேயே செயிச்சுடமாட்டமா?

ஐமுக கர்நாடாக மாநில கமிட்டி தலைவர் முரளிதரன் கூர்க் மலையில் நமக்கு உறுப்பினர் சேர்க்க சென்ற இடத்தில் நாலு கூடை டீ இலையை லவட்டிக்கொண்டு வந்துள்ள வீரச்செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்! இந்த 4 கூடை டீ இலை 4000 டீயாக மாறும் நாள் வெகு தூரத்தில் இல்லை!

அடுத்த தேர்தல் கூட்டணி பற்றி நம்முடன் கலந்து பேச மிகவிரைவில்

சென்னைலர்ந்து ஸ்டாலின் வருவாக!

பீகார்லர்ந்து லாலு வருவாக!

அந்திராலர்ந்து சந்திரபாபு நாயுடு வருவாக!

பாகிஸ்தான்லர்ந்து சர்தாரி வருவாக!

அப்பிடியே

பக்கத்து ஸ்டேஷன்லர்ந்து கானுஸ்டபிளும் வருவாக!@#$%

என்பதால், யோசனைகளை கைவிட்டுவிட்டு


ஐடியா புலிகளே! வீறுகொண்டு களமிறங்குங்கள், உறுப்பினர்களை சேருங்கள்! விரைவில் நம் ஐடியா கழக மாநில மாநாடு சென்னை ஜிங்குச்சான் குப்பத்தில் நடைபெற உள்ளது! அந்த மாபெரும் தருணத்தில் நம்மோடு ஜாக்கிசானும் ஜானெட் ஜாக்சனும் மாநாட்டில் கலந்துகொண்டு நம் ஐமு கழகத்தின் ”மிகச்சிறந்த ட்ம்மி பீஸு”, ”அதிசிறந்த காமெடி பீஸு” என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விருதுகளையும் மூத்த உறுப்பினர் ஒருவருக்கு ”வாழ்நாள் டமாஷூ” விருதையும் வழங்க உள்ளார்கள்.

 

அலைகடலென வாருங்கள், ஐடியாக்களை அள்ளித்தெளியுங்கள்!


சொன்னதும் ஐடியா! செய்வதும் ஐடியா!

Sunday 28 March 2010

வளர்ப்பு மகன் மாதிரி வளர்ப்பு அப்பா?!@#$

நமது ஐமுகவில் அரங்கு நிறைந்த உறுப்பினர் பதிவு எகிறிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் வாழ்த்து சொன்ன உலகத்தலைவர்கள் யார் யார் என்கிற கேள்வியை நமது அலுவலக காவலர் ஊட்டி சுள்ளிபொறுக்கி முன்வைத்த போது நடந்த விபரீதம்தான் இந்த வளர்ப்பு அப்பா வெவகாரம்!

ஒபாமா வீட்டை விட்டு ஓடிப்போனதால் ஒயிட் ஹவுஸுக்குள் புகுந்த அப்பா புஷ்ஷும் மகன் புஷ்ஷும் ”ஹையா, இனிமேலும் நாங்கதான் ஜனாதிபதி” என்று உதார் விட, அங்கே 47D பஸ்ஸுக்கு புறப்பட்டுக்கொண்டிருந்த நம்ம விக்னேஸ்வரி இரண்டு புஷ்ஷுகள் முதுகிலும் நாலு சாத்து சாத்தி “போங்கடா, வெளியே போய் விளையாடுங்கடா” என விரட்டிவிட்டார். இதை கண்டு அசந்து போன அமெரிக்க அதிகாரிகளால் விக்கிக்கு அமெரிக்க அரசின் உயரிய விருதான “ப்ரேவ் கேர்ள் ஆப் அமெரிக்கா” வழங்கப்பட்டது. அந்த விருதை வாங்கிய நமது விக்கி, பழைய இரும்பு, ஈயம் பித்தாளைக்கு பேரிச்சம்பழம் கடையில் போட்டு லைன் டேட்ட்ஸ் வாங்கி சாப்பிட்டு விட்டு “எப்பூடி?’ என்று சொல்லி தாயகம் திரும்பினார்! விதவுட்டில் வந்த அவரை டிக்கட் பரிசோதகர்கள் நடுவானில் இறக்கிவிட்டனர் என்று ஏஜன்சி செய்திகள் தெரிவிக்கின்றன! வங்காளவிரிகுடா கடலில் எந்த நேரமும் சுனாமி தாக்கலாம் என எல்லா நாடுகளும் கதிகலங்கி போய் கிடக்கிறார்கள் என நமது மீனவ செய்தியாளர் துலுக்கானம் டாஸ்மாக் பாரிலிருந்து செய்தி அனுப்பியுள்ளார்!

அவர் போலவே டெல்லி திரும்பிய சஞ்சய்காந்தியை வளைத்துப்பிடித்த இந்திய உளவுப்பிரிவினர் “இவர்தான் இந்திராகாந்தியின் இளையமகன் சஞ்சய்காந்தி” என்று சோனியா காந்தியிடம் ஒப்படைக்க, அங்கு வந்த மேனகா காந்தி சஞ்சய்காந்தியை பார்த்து “ஹம் ஆப்கோ கோன் ஹை” என்கிற குடும்ப கேள்வியை கேட்க, நம்ம சஞ்சய் ஒரு குன்சாக “கயமத் சே கயாமத் தக்” என்று போட்ட பிட்டு உண்மை பதிலாக அமைந்து போனதில் சஞ்சய்க்கு உடனடி நிக்காஹ் முடிவானது. எந்தவிதமான பதட்டமுமின்றி கால் கையில் மருதானி வைத்துக்கொண்டு, பெரிய ஷர்வாணியை அணிந்து கொண்ட சஞ்சய் “ஆனது ஆகிப்போச்சு, வருன் என் புள்ளை மாதிரி” என்று  ராஜஸ்தானி தலைப்பாவையும் கேட்டு வாங்கி கட்டிகொண்டார்! ஏதேச்சையாக அங்கு வந்த சோனியாவின் ஆபிஸ் பாய் மன்மோகன்சிங்கு “அடடே, இவரு நம்ம கோவை சஞ்சய்காந்தி, நான் ரோஜா படத்துல வர்ற தீவிரவாதி மாதிரி கோவை அக்ரிகல்சர் காலேஜுல படிச்சப்ப, அங்க கோலி விளையாடிட்டிருந்த பையன்” என்று சஞ்சயின் டவுசருக்கு வந்த ஆபத்தை காப்பாற்றினார்.

மேலும் ஐமுகவில் அதிக ஐடியா கொடுப்பவர்தான் தலைவர் என்கிற புரளி நைஜீரீயா வரை பரவியதில் உஷாரான ராகவன், உடனே புருனே சுல்தானை தன் வளர்ப்பு அப்பா என அறிவித்து துபாய் அபுதாபி உள்ளிட்ட நகரங்களில் பலத்த வன்முறைக்கு வித்திட்டார். கார் பஸ்கள் எரிக்கப்பட்டன, நைஜீரியா ராகவன் ரசிகர் மன்றத்தினர் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.  எனினும் அதைப்பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாத ராகவன் துபாய் விவேகானந்தர் நகர், துபாய் குறுக்கு சந்தில் அமைந்துள்ள நமது ஐமுக கிளை அலுவலகத்திலிருந்து புருனே சுல்தானை தான் வளர்ப்பு தந்தையாக தத்தெடுத்ததால் சுல்தானின் சொத்து முழுவதையும் வடபழனி சாலிகிராமத்தில் உள்ள தஞ்சாவூர் யூனியன் பேங்கில் 12 % வட்டிக்கு டிபாசிட் செய்து விடவேண்டும் என சர்வதேச போலிசாரை கேட்டுக்கொண்டார். இதை கேள்விப்பட்ட புருனே சுல்தான் மாறுவேடத்தில் கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் பவர்லூம் வேலைக்கு செலபவர் போல் சுற்றிக்கோண்டிருப்பதாக நமது காரணம்பேட்டை, கரடிவாவி பகுதி ஒன்றிய அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நைஜீரியா ராகவன் புருனே சுல்தானை அறிவித்த மாதிரி சஞ்சய் விரைவில் மன்மோகன்சிங் மாதிரி தலைப்பா கட்டிக்கொண்டு சிங்குக்கு ஆப்பு வைக்கக்கூடும் என மத்திய அரசு உளவு நிறுவணமான ரா அமைப்பு தெரிவித்ததை அடுத்து சிங்கு வெளிநாடு சுற்றுப்பயணம் செல்லக்கூடும் என பிடிஐ செய்திகுறிப்புகள் கூறினாலும் கூறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நமது மாணவரணி தலைவி பப்பு ”3வய்தை தாண்டியவர்க்கு ஓட்டுரிமை, ஹோம் ஒர்க் கொடுக்கும் மிஸ்ஸுக்கு ஸ்டேண்டப் ஆன் த பெஞ்ச் தண்டனை, முழுப்பரிட்சை வைக்கும் ஸ்கூலுக்கு உரிமம் ரத்து” என தன் ஐடியாக்களை தமிழக கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு அனுப்பியுள்ளதை தொடர்ந்து தங்கம் “ஸ்ஸூ அப்பா, இப்பவே கண்ணை கட்டுதே! பேராசிரியர் ஐயா நீங்களே கல்வி அமைச்சக பொறுப்பு எடுத்துக்கங்க சாமி” என பேராசிரியர் வீட்டு வாசலில் கதியாய் கிடப்பதாக அந்த ஏரியா கூர்க்கா ரத்தன் சிங் கூறுகிறார்!

இப்படியாக ஐமுகவின் அதிரடி வளர்ச்சியை கண்டு இந்திய, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உட்பட்ட கோபால் பல்பொடி நாடுகளுடன் தாய்லாந்து, இந்தோனேஷிய அரசுகளும் அதிர்ந்து போயுள்ளன.

ஐடியா முன்னேற்ற கழகம் உதித்தது! உலகத்தலைவர்கள் வாழ்த்து!!

நேற்று அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெறுவதாக நாங்கள் திட்டமிட்டிருந்த “தமிழ்நாடு ஐடியா முன்னேற்ற கழகத்தின் தொடக்க விழாவை சென்னை மவுண்ட் ரோடில் மேடை போட்டு 4 மணி நேரம் டிராபிக் ஜாம் செய்து நடத்துவதாக இருந்தது.

ஆனால் நமது சர்வதேச முன்னேற்ற முண்ணனி தலைவர்களில் ஒருவரான ஒபாமா அழுது அடம் பிடித்ததால் மேற்படி விழாவை வெள்ளை மாளிகையில் நடத்த வேண்டியதாயிற்று. வழக்கம் போல் லாரியில் வந்த கழக கண்மணிகளுக்கு கொடுக்கவேண்டியதை கொடுத்து அப்படியே லாரியோடு ஃப்ளைட்டில் ஏற்றி கொண்டு போய் நியுயார்க் நகரில் இறக்கினோம். அடடா…., அங்குள்ள மக்கள அடுத்த 5 நிமிடத்தில் இடத்தை காலி செய்துகொண்டு போனவர்கள் 2 நாளாக அவரவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என உளவுத்துறை தகவல் கூறுகிறது.

தமிழ் கலச்சாரப்படி குத்து விளக்கு ஏற்ற முயற்சிக்கையில் மெழுகுவர்த்தி கிடைக்காமல் ஒரு பந்தம் கொழுத்தி பயன்படுத்தியதில் வெள்ளை மாளிகையில் உள்ள ஃபயர் அலார்ம்கள் செயல் பட்டு கட்டிடத்தின் உட்புறம் தொடர்ந்து 1 ம்ணி நேரம் மழை பெய்த்தில் நமது கழகச்சிங்கங்கள் கையோடு கொண்டுவந்த கோபால் பல்பொடியில் பல்விளக்கி, 501 பார் சோப்பில் குளித்தும் துணிகளை துவைத்தும் உலர்த்தியதில் ஒபாமாவும் என்னவென்றே புரியாமல் கலந்து கொண்டார். ஆனாலும் ஒபாமாவுக்கு கடைசிவரை கோவனம் கட்டுவது கைவரப்பெறாமலேயே போய்விட்டது!

நமது கழகத்தின் கொளகை பரப்பு செயலாளராக வருவதற்கு  3சி பேரம் பேசிய மகளிரனி செயலர் பிரச்சார பீரங்கி, செந்தமிழ் செல்வி, டாக்டர். விஜிராம் பேசும் போது அமெரிக்க கிளை கழகத்துக்கு மோனிகா லெவன்ஸ்கியை தலைவியாக போடுமாறு சொன்னது அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. லெவின்ஸ்கியெல்லாம் ஒரு ஃபிகரா என்றூ சஞ்சய்காந்தி கொழுத்திப் போட்ட தகராறை ஒபாமா பெண்டாட்டியே தீர்த்து வைத்ததில் சஞ்சய் அமைதியாகிப்போனார்.

இப்படியாக இரவு 12 வரை நீண்ட தொடக்க விழா கொண்டாட்டங்களில் எடுத்துரைக்கப்பட்ட நமது த.நா. ஐ. மு.கழக கொளகை விளக்கங்களை கேட்க முடியாத அளவு அணைவரும் மட்டை ஆகிப் போனதில அவர்களுக்காக வெள்ளை மாளிகையிலேயே கொள்கைகளை ஓசி ஜெராக்ஸ் எடுத்து கொடுக்கப்பட்டது.

பிற்பாடு, பல முக்கிய முடிவுகளை உறுப்பினர்கள் முன்மொழிய சில சட்டைகிழிப்பு, செவிலில் விழுந்த அறைகளோடு அமைதியாக பேசி முடிக்கப்பட்டது. இறுதியில் வேட்டி பறி போய் அண்டர்வாரோடு அலைந்து கொண்டிருந்த பட்டர்பிளை சூர்யாவுக்கு ஒபாமாவின் மகள் கொடுத்த பழைய பர்முடாசை காதல் சின்னமாக சூர்யா பாவிக்க, ஒரு கடுக்கன் போட்ட 7அடி கருப்பன் வந்து தான்தான் அந்த பெண்ணை கட்டிக்கொளப்போகிற மாப்பிள்ளை என்று சொன்னவுடன் அந்த ஏரியாவை காலி செய்த  சூர்யா ஒபாமா மனைவியோடு உலக சினிமா பற்றி உரையாடப்போன 1.30 மணி நேரத்தில் அந்தம்மாவுக்கு காதில் ரத்தம் வந்து ஆஸ்பித்திரி கிளம்பினார்.

மாபெரும் வெற்றிகரமாக நடந்து முடிந்து போன இந்த த.நா.ஐ. மு. கழக தொடக்கவிழாவின் பாதிப்பு அமெரிக்காவில் எதிரொலிக்கிறது. ஒபாமா ஒரு வாரத்திற்கு ஹோட்டலில் தங்கப்போவதாக சொல்லி குடும்பத்தோடு வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிவிட்டார்.

நல்ல பினாயில், நம்ம ஊரு ஆசிட் என பல ஐட்டங்களை போட்டு கருப்பாகிவிட்ட வெள்ளை மாளிகையை நிறம் மாற்றும் காண்ட்ராக்ட் நமது கழகத்திற்கே கிடைத்திருப்பது மகிழ்ச்சி, ஆனால் பார்ட்டியில் நம் மக்கள் களவாண்ட 78ஸ்பூனு, 100 போர்க், ஜாம் மற்றும் சாஸ் பாட்டில்கள், எவர்சில்வர் தட்டுகள், சிகரெட் ஆஸ்டிரேக்கள் எல்லாவற்றையும் கொடுத்தால்தான் பில் பாசாகும் என்று ஒபாமா திட்டவட்டமாக சொல்லி விட்டதால், சர்வதேச கூட்டணியிலிருந்து ஒபாமாவை கழட்டி வீட்டு விடுவ்து என தீர்மணிக்கப்பட்டு அவருக்கு பதில் நமது நீண்டகால நண்பர் ஒசாமா பின்லேடனை கூட்டு சேர்த்துக்கொள்வது என்று திட்டமிடப்பட்டுள்ளது. ஆனாலும் வெள்ளை மாளிகை பாத்ரூம் ரோல்கள், பிளாஸ்டிக் மக் ஆகியவற்றை நைசாக கொண்டு வந்த நம் மக்களின் தீரத்தைப் பற்றி பாராட்டாமல் இருக்கமுடியாது

இன்னும் எண்ணற்ற வளர்ச்சிப் ப்ணிகள் தொடங்கிவிட்டன! த.நா.ஐ.மு. கழகத்தின் வளர்ச்சி ஐ.ஆர் 8 குறுவை நெல் சாகுபடிக்கு இணையாகவும் 1MBPS ப்ராட்பேண்ட் ஸ்பீடிலும் இருக்கும் என்று இன்னும் இந்தவார ஹோம் ஒர்க்கை எழுதிமுடிக்காத கழகத்தின் மாணவரணி தலைவி பப்பு சொல்வது குறிப்பிடத்தக்கது!!

பலத்த கரககோஷத்தோடு தமிழ்நாடு ஐடியா முன்னேற்ற கழகம் உதித்தது!